உயர் இரத்த அழுத்தம் இருப்பவர்கள் அடிக்கடி பரசிட்டமோல் (Paracetamol) மாத்திரை சாப்பிட்டால் மாரடைப்பு வரும் ஆபத்து இருப்பதாக ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.
எடின்பர்க் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் நடத்திய ஆய்வின் முடிவில், இது தெரியவந்துள்ளது.
உலகின் பல்வேறு நாடுகளில் பரசிட்டமோல் (Paracetamol) மாத்திரை பரவலாக பயன்படுத்தப்படுகிறது. இந்நிலையில் உயர் இரத்த அழுத்தம் இருப்பவர்களுக்கு பரசிட்டமோல் மாத்திரை வழங்கி பரிசோதனை செய்ததில், இரத்த அழுத்தம் உயர்ந்து, மாரடைப்பு மற்றும் பக்கவாதம் வருவதற்கான அபாயம் அதிகரித்தது கண்டறியப்பட்டதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.