Our Feeds


Wednesday, March 9, 2022

ShortTalk

ஹாலி எல 18 வயது பாடசாலை மாணவி கொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் கைது

 

பதுளை – ஹாலி எல, உடுவரை மேல் பிரிவின் 7 ஆம் கட்டை பகுதியில் 18 வயதான பாடசாலை மாணவியொருவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஹாலி எல பகுதியில் உள்ள தமிழ் பாடசாலையொன்றில் கல்வி கற்றுவந்த குறித்த மாணவி, வீடு திரும்பிய சந்தர்ப்பத்தில், நேற்று ஆயுதமொன்றில் தாக்கிக் கொலை செய்யப்பட்டிருந்தார்.

நீண்ட காலம் நிலவிய முன் பகை காரணமாக இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

எவ்வாறாயினும், சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் அந்த பகுதியில் இருந்து தலைமறைவாகியிருந்தார்.

இந்நிலையில், பொலிஸார் முன்னெடுத்த விசாரணைகளையடுத்து இன்று அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அத்துடன், குறித்த யுவதியை கொலை செய்வதற்காக, சந்தேகநபர் பயன்படுத்திய ஆயுதமும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »