Our Feeds


Thursday, March 10, 2022

SHAHNI RAMEES

மார்ச் 23இல் ஜனாதிபதி தலைமையில் சர்வகட்சி மாநாடு!

 
\

பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வது குறித்து கலந்துரையாட, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் சர்வகட்சி மாநாடு ஒன்றை மார்ச் 23ஆம் திகதி நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அறியமுடிந்தது.

அதன்படி, மார்ச் 23ஆம் திகதி காலை 10 மணிக்கு இந்த மாநாடு இடம்பெறவுள்ளது.

பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கான சர்வகட்சி மாநாடு ஒன்றை நடத்துமாறு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி கோரிக்கையொன்றை முன்வைத்திருந்தது.

இதனையடுத்து, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் இடையில் நேற்று முன்தினம் (08) இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் சர்வகட்சி மாநாடு ஒன்றுக்கு ஜனாதிபதி இணக்கம் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்தே, இந்த சர்வகட்சி மாநாட்டை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஜனாதிபதி செயலகத்தில் எதிர்வரும் 23ஆம் திகதி காலை 10 மணிக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இடம்பெறவுள்ளது.

இந்த சர்வகட்சிக்கு மாநாட்டுக்கு நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் அனைத்து கட்சித் தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்படவுள்ளதாகவும் அறிய முடிந்தது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »