Our Feeds


Friday, March 11, 2022

ShortTalk

பாடசாலை மாணவனை 4 ஆண்டுகளாக பாலியலுக்குப் பயன்படுத்தியதாக ஆசிரியை மீது குற்றச்சாட்டு!



(எம்.எப்.எம் பஸீர்)


பாடசாலை மாணவன் ஒருவனை நான்கு வருடங்களாக பாலியல் நடவடிக்கைககளுக்குப் பயன்படுத்தி துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் பிரபல பாடசாலை ஒன்றின் ஆசிரியை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.

இந்தச் சம்பவம் தொடர்பில் உடனடியாக விசாரணைகளை ஆரம்பிக்குமாறு சிறுவர் மற்றும் மகளிர் துஷ்பிரயோக தடுப்பு பணியகத்துக்கு கொழும்பு மேலதிக நீதிவான் லோச்சனி அபேவிக்ரம உத்தரவிட்டுள்ளார்.

20 வயதுடைய இளைஞர் ஒருவர் இவ்வாறு பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்பட்டுள்ளமை தொடர்பில் விசாரணைகளை ஆரம்பிப்பது குறித்து சிறுவர் மற்றும் மகளிர் துஷ்பிரயோக தடுப்புப் பிரிவு அதிகாரிகள் நீதிமன்றத்துக்கு முதல் தகவல் அறிக்கையை தாக்கல் செய்ததை தொடர்ந்து நீதிவான் இந்த விசாரணைக்கான உத்தரவை பிறப்பித்தார்.

பாதிக்கப்பட்டதாக கூறப்படும் இளைஞர் மாணவனாக இருந்தபோது சந்தேக நபரான ஆசிரியையை கிரிக்கெட் சமர் (பிக்மெச்) ஒன்றின்போது சந்தித்துள்ளார். அதன் பின்னர் அவரை ஏழு தடவைகள் கல்கிஸை பகுதியில் உள்ள ஹோட்டலொன்றுக்கு இந்த ஆசிரியை அழைத்துச் சென்று பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளமை தொடர்பில் தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளதாக சிறுவர் மற்றும் மகளிர் துஷ்பிரயோக தடுப்பு பிரிவு அதிகாரிகள் நீதிமன்றின் கவனத்துக்கு கொண்டு வந்தனர். இந்நிலையில் அது குறித்து விசாரணைகளை முன்னெடுத்து நீதிமன்றுக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »