(இராஜதுரை ஹஷான்)
எரிபொருள் விலையேற்றத்தை தொடர்ந்து மின் கட்டணத்தை அதிகரிக்க அனுமதி வழங்குமாறு மின்சார சபை கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பில் இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவிக்கையில்,
எரிபொருள் விலையேற்றத்தை தொடர்ந்து மின் கட்டணத்தை அதிகரிக்க அனுமதி வழங்கமாறு இலங்கை மின்சார சபை விடுத்த கோரிக்கையை பரிசீலித்து வருகிறோம்.
தற்போதைய நெருக்கடியான சூழ்நிலைமையில் அனைத்து தரப்பினரது கோரிக்கைகளுக்கும் கவனம் செலுத்த வேண்டிய தேவை காணப்படுகிறது. இலங்கை மின்சார சபை பாரிய நிதி நெருக்கடியை தற்போது எதிர்க்கொண்டுள்ளது என்றார்.