” நாட்டில் இரு நாட்களில் டொலரின் பெறுமதி சடுதியாக அதிகரித்துள்ளது. இதனால் எரிபொருள் உட்பட அனைத்து பொருட்களின் விலைகளும் அதிகரித்துள்ளன. ஆனால் நிதி நிலைமை பற்றி நிதி அமைச்சர் நாடாளுமன்றத்துக்கு தெளிவுப்படுத்தாமல் உள்ளார். அவர் உடன் சபைக்கு வந்து தெளிவுபடுத்த வேண்டும்.”
இவ்வாறு ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க இன்று சபையில் வலியுறுத்தினார். அத்துடன், ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் இந்த வலியுறுத்தலை விடுத்தனர்.