Our Feeds


Friday, March 11, 2022

ShortTalk

பண்டிகை காலத்தில் பொருட்களின் விலைகள் மேலும் அதிகரிக்கலாம்



எதிர்வரும் பண்டிகை காலத்தில் அரிசி, பருப்பு, சீனி உட்பட அத்தியவசிய பொருட்களின் விலைகள் மேலும் அதிகரிக்கக் கூடும் என அத்தியவசிய பொருட்களை இறக்குமதி செய்யும் வர்த்தகர்களின் சங்கம் தெரிவித்துள்ளது.


அமெரிக்க டொலரின் பெறுமதி பண மிதப்பின் அடிப்படையில் தீர்மானிக்கப்படும் என்பதால், அத்தியவசிய பொருட்களின் விலைகள் அதிகரிக்கும் என சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் நிஹால் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

அமெரிக்க டொலரின் பெறுமதி மிதக்கவிடப்பட்டுள்ள சந்தர்ப்பத்தில் இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலைகளை எப்படி தீர்மானிப்பது என்பது குறித்து இன்னும் சரியான முடிவுக்கு வர முடியவில்லை.

அடுத்த வாரத்தில் இது சம்பந்தமான அறிக்கையை வெளியிடுவதாகவும் செனவிரத்ன தெரிவித்தார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »