தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச, பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில ஆகிய இருவரையும் அரசில் தக்கவைத்துக்கொள்ள வேண்டும். அதற்கான சமரசப் பேச்சுகள் ஆரம்பிக்கப்பட வேண்டும்.” – என்று அமைச்சர் திலும் அமுனுகம நேற்று தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை மட்டும் கருதி, சில தரப்புகளால் முன்வைக்கப்படும் யோசனைகளை எல்லாம் ஏற்று செயற்படமுடியாது. ஶ்ரீலங்கா சுதந்தரக்கட்சி அரசியல் இருந்து வெளியேறுவதாக இருந்தால் வெளியேறட்டும். அதனை நாம் தடுக்கவில்லை. ஆனால், விமல், கம்மன்பில போன்றவர்கள் தக்கவைத்துக்கொள்ள வேண்டும்.
மைத்திரிபால சிறிசேன வழமைபோல தனது வேலையை விமல், கம்மன்பில போன்றவர்களுக்கும் காண்பித்துவிட்டார். மாநாட்டுக்கு வருகை தந்த அவர், பங்காளிக்கட்சிகள் நடத்திய ஊடக சந்திப்புக்கு வரவில்லை. எனவே, நம்ப வைத்து காலைவாரிவிட்டார்.” – என்றார்.