நாட்டில் அடுத்து நடைபெறும் எந்தவொரு தேர்தலாக இருந்தாலும் அதில் ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தனித்து களமிறங்க வேண்டும் என்று அக்கட்சியின் அனைத்து தொகுதி அமைப்பாளர்கள் கூட்டாக கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது தொடர்பில் கட்சியின் மத்தியசெயற்குழுக் கூட்டத்தில் ஆராயப்பட்டு, இறுதி முடிவெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது .
ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தொகுதி அமைப்பாளர்களுக்கான விசேடக் கூட்டமொன்று கட்சித் தலைவர் மைத்திரிபால சிறிசேன தலைமையில் கட்சி தலைமையகத்தில் நேற்று நடைபெற்றது.
கட்சியின் ஏற்பாட்டுப்பணிகள், அரசுக்குள் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி நிலைமை உட்பட சமகால அரசியல் விவகாரங்கள் தொடர்பில் இதன்போது விரிவாக ஆராயப்பட்டுள்ளன.
அவ்வேளையிலேயே அடுத்து நடைபெறும் எந்தவொரு தேர்தலாக இருந்தாலும் அதில் ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தனித்து போட்டியிட வேண்டும் என தொகுதி அமைப்பாளர்கள் யோசனை முன்வைத்து, ஏகமனதான ஆதரவை வெளிப்படுத்தியுள்ளனர்.
இது தொடர்பில் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தில் ஆராய்ந்து இறுதி முடிவெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.