விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோர் அமைச்சர் பதவிகளிலிருந்து விலக்கப்பட்டமை சரியான தீர்மானம் இல்லை என்று முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
குறித்த அமைச்சர்கள் பதவி நீக்கப்பட்டமை தொடர்பாக அண்மையில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்திருந்த மைத்ரிபால சிறிசேன, அது ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைவான தீர்மானம் என்று குறிப்பிட்டிருந்தார்.
எனினும், விமல் மற்றும் உதய பதவி நீக்கப்பட்டமையானது, இந்த சமயத்தில் உசிதமான தீர்மானம் இல்லை என்று நேற்று ஹிரு தொலைக்காட்சிக்கு தெரிவித்துள்ளார்.