உக்ரைனில் வசித்துவரும் 27 இலங்கையர்கள், அந்நாட்டிலேயே தொடர்ந்தும் தங்கியிருக்க விருப்பம் தெரிவித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
பெலாரஸில் கல்வி கற்கும் இலங்கை மாணவர்களுக்கு ஒரு மாத கால கட்டணமற்ற விடுமுறை வழங்க பெலாரஸ் அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் இவ்விடயங்களை வெளியிட்டார்.