Our Feeds


Thursday, March 10, 2022

ShortTalk

BREAKING: பயங்கரவாத தடைச் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் | பிரதான எதிர்க்கட்சியின் நிலைப்பாடு எழுத்தில் அறிவிப்பு



எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனிடம் பயங்கரவாதத் தடைச் சட்டம் தொடர்பான தமது கட்சியின் நிலைப்பாட்டை விளக்கும் வகையில் கடிதம் ஒன்றை இன்று காலை கையளித்துள்ளார்.


பயங்கரவாத தடைச் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும், அதற்குப் பதிலாக சர்வதேச தரத்திற்கு ஏற்ற சட்டம் கொண்டு வர வேண்டும் என்றும் அவரது கட்சியும் கோருவதாக அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேநேரம் பயங்கரவாத தடைச்சட்டத்தில் காணப்படும் தேசிய பாதுகாப்புக்கும் மனித உரிமை மீறல்கள் குறித்த விடயங்களும் இல்லாமலாக்கபட வேண்டும் என்றும் குறித்த கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »