நிலவும் டீசல் தட்டுப்பாடு காரணமாக, தனியார் பஸ்களின் சேவைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அகில இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய, பிரதான நகரங்களில் பேருந்துகளுக்காக ஒரு எரிபொருள் நிரப்பு நிலையத்தை ஒதுக்குமாறு அந்த சங்கத்தின் செயலாளர் அஞ்சன ப்ரியஞ்ஜித் கோரியுள்ளார்.
நேற்றைய தினத்தை விடவும் இன்றைய தினம் அதிகளவான பஸ்கள் சேவையில் இருந்து விலகியுள்ளன.
இன்றைய தினத்தை விடவும் நாளைய தினம் அதிகளவான பஸ்கள் சேவையில் இருந்து விலகுவதற்கான சந்தர்ப்பங்கள் காணப்படுகின்றன.
எனவே, மிக விரைவில் டீசலை பெற்று தருவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் செயலாளர் அஞ்சன ப்ரியஞ்ஜித் தெரிவித்துள்ளார்.