Our Feeds


Wednesday, March 9, 2022

SHAHNI RAMEES

யாழ்ப்பாணத்தில் தனியார் பஸ் சாரதியின் மூக்கை வெட்டி தப்பியோடிய நபர்!

 


யாழ்ப்பாணத்தில் தனியார் பஸ் ஒன்றை இடைமறித்த நபரொருவர் சாரதியின் மூக்கை கத்தியால் வெட்டி விட்டு தப்பியோடியுள்ளார்.

யாழ்ப்பாணம் – பருத்தித்துறை வீதியில் நேற்று (07) செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் காயமடைந்த சாரதி சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.



பருத்தித்துறையிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்று கொண்டிருந்த குறித்த தனியார் பஸ்ஸை நீர்வேலி கந்தசுவாமி ஆலயத்துக்கு அருகில் வழிமறித்த நபரொருவர், சாரதியின் மூக்கை கத்தியால் வெட்டி விட்டு தப்பியோடியுள்ளார்.

அதனைடுத்து அங்கு நின்றவர்கள் சாரதியை மீட்டு யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதித்தனர்.

சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்ட நிலையில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »