சர்வதேச நாணய நிதியத்துடன் (IMF) இலங்கை அடுத்த மாதம் பேச்சுவார்த்தையை ஆரம்பிக்கவுள்ளது.
இதற்காக நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ எதிர்வரும் ஏப்ரல் மாதத்தில் அமெரிக்கா செல்ல உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, சர்வதேச நாணய நிதியத்தின் மூத்த அதிகாரிகளுடன் கலந்துரையாடலை மேற்கொள்வதற்கு நிதியமைச்சர் எதிர்பார்த்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. (தமிழன்)