Our Feeds


Thursday, March 10, 2022

ShortTalk

இலங்கை வங்குரோத்து நிலையை அடைந்துவிட்டது - பொருளாதார நிபுணர் ஹர்ஷ MP எச்சரிக்கை. - VIDEO



இந்தியாவிற்கு இலங்கையினால் இந்த வாரம் 900 மில்லியன் டொலர் செலுத்த வேண்டியிருந்ததாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவிக்கின்றார்.


எனினும், இலங்கை மத்திய வங்கியிடம் தற்போது 300 மில்லியன் அமெரிக்க டொலர் மாத்திரமே காணப்படுவதாகவும் அவர் கூறுகின்றார்.

இந்த கடனை செலுத்த இந்தியா, மேலும் இரண்டு மாத கால அவகாசம் வழங்கியுள்ளதாக கூறிய அவர், அவ்வாறு அவகாசம் வழங்காவிடின், இலங்கை தற்போது வங்குரோத்து ஆகியிருக்கும் எனவும் குறிப்பிட்டார்.

இலங்கையின் தற்போதைய பொருளாதார நிலைமை குறித்து, கலந்துரையாடல்களை நடத்துவதற்காக இலங்கை மத்திய வங்கிக்கு ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று நேற்றைய தினம் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »