கொத்துக்கான காப்புரிமையை இலங்கை பெற வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி சரித்த ஹேரத், நாடாளுமன்றத்தில் இன்று கூறியுள்ளார்.
இலங்கையின் உள்ளூர் உணவுகளுக்கு காப்புரிமை பெறுவது குறித்து கவனம் செலுத்தப்பட வேண்டும் எனவும் இதன் மூலம் வளர்ச்சியடைந்த நாடுகளுடான வர்த்தத்தை பலப்படு;தத முடியும் எனவும் அவர் கூறியுள்ளார்.
மட்டக்களப்பிலிருந்தே கொத்து ஆரம்பித்தாக தெரியவந்துள்ளதாகவும் தற்போது ஐஸ் கிறீம் கொத்து உட்பட பல்வேறு வகையான கொத்துகள்; உள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி சரித்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான பேராசிரியர் சரித்த ஹேரத் நாடாளுமன்ற கோப் குழுவின் தலைவராகவும் பதவி வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.