Our Feeds


Tuesday, March 8, 2022

ShortTalk

மட்டக்களப்பிலிருந்தே கொத்து ஆரம்பித்தது - கொத்துக்கு இலங்கை காப்புரிமை பெற வேண்டும். - ஆளும் கட்சி MP கோரிக்கை.




கொத்துக்கான காப்புரிமையை இலங்கை பெற வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி சரித்த ஹேரத், நாடாளுமன்றத்தில் இன்று கூறியுள்ளார். 


இலங்கையின் உள்ளூர் உணவுகளுக்கு காப்புரிமை பெறுவது குறித்து கவனம் செலுத்தப்பட வேண்டும் எனவும் இதன் மூலம் வளர்ச்சியடைந்த நாடுகளுடான வர்த்தத்தை பலப்படு;தத முடியும் எனவும் அவர் கூறியுள்ளார்.

மட்டக்களப்பிலிருந்தே கொத்து ஆரம்பித்தாக தெரியவந்துள்ளதாகவும் தற்போது ஐஸ் கிறீம் கொத்து உட்பட பல்வேறு வகையான கொத்துகள்; உள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி சரித்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான பேராசிரியர் சரித்த ஹேரத் நாடாளுமன்ற கோப் குழுவின் தலைவராகவும் பதவி வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »