இலங்கை அரசியல் யாப்பின் அடிப்படையில் கிடைக்கப் பெற்றுள்ள தனியார் சட்டத்தை நீக்கக் கூடாது எனக்கோரி கொழும்பு, சுதந்திர சதுக்க சுற்றுவட்டத்தில் இன்று அமைதி ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
முஸ்லிம் தனியார் சட்டம் என்பது எமது முன்னோர்களினால் போராடி பெறப்பட்ட ஒரு உரிமை மாத்திரமல்லாமல் முஸ்லிம் தனியார் சட்டம் மார்க்க ரீதியாக இஸ்லாமிய முறைப்படி திருமணம், விவாக ரத்து, சொத்துப் பங்கீடு போன்றவற்றை நாம் செய்து கொள்வதற்கான வழியை ஏற்படுத்துகிறது. முஸ்லிம் தனியார் சட்டத்தைப் போல் மற்ற சமூகத்தினருக்கும் தனியான சட்டங்கள் அரசியல் யாப்பினூடாகவே வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் முஸ்லிம் தனியார் சட்டத்தில் தேவையான திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமே தவிர அதனை முழுமையாக இல்லாமலாக்குவதை முஸ்லிம் சமுதாயம் ஒரு போதும் ஏற்றுக் கொள்ளாது என்பதை ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் பதாதைகள் ஏந்தித் தெரிவித்தார்கள்.