Our Feeds


Sunday, March 6, 2022

ShortTalk

ராஜபக்ஷ அரசாங்கம் மே கடைசியில் கவிழும் | மூன்றில் இரண்டு பெரும்பான்மையை இழக்கும் நிலைக்கு வந்துவிட்டது - ஆளும் SLPP, MP விஜேதாச தெரிவிப்பு



நாட்டில் தற்போது அரசாங்கம் என்றொன்று கிடையாது. ராஜபக்ஷ குடும்பம் மாத்திரமே ஆட்சி செய்து கொண்டிருக்கிறது. இவர்களால் ஏப்ரல் அல்லது மே மாதம் வரை மாத்திரமே பயணிக்க முடியும். அதன் பின்னர் ராஜபக்ஷ அரசாங்கம் செயல்பாட்டு ரீதியில் கவிழ்வது நிச்சயம் என்று ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.


ஆளும் தரப்பை பிரதிநிதித்துவப்படுத்தும் பலர் சுயாதீனமாக செயல்படுகின்ற நிலையில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும் அவ்வாரானதொரு தீர்மானத்தை எடுத்தால் அரசாங்கம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை இழக்க நேரிடும். தொடர்ந்தும் தனியொருவருக்கு அதிகாரங்களை வழங்க மக்கள் தயாராக இல்லை என்பதால் மக்கள் எதிர்பார்க்கும் ஆளுமைமிக்க பாரிய அரசியல் சக்தியொன்று உருவாகின்றது. அதுகுறித்து பின்னர் நாட்டுக்கு வெளிப்படுத்தப்படும் என்றும் விஜேதாச ராஜபக்ஷ சுட்டிக்காட்டினார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »