இன்றைய (26) தினத்தில் அதிகளவான பெற்றோல் விநியோகம் செய்யப்பட்ட போதிலும் டீசலுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலிய தனியார் தாங்கி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
நாட்டில் தற்போது 90,000 மெற்றிக் தொன் பெற்றோல் கையிருப்பில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதாக அதன் இணைச் செயலாளர் டி.வி.சாந்த சில்வா தெரிவித்துள்ளார்.
பெற்றோல் இருப்பு சுமார் 20 நாட்களுக்கு போதுமானதாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.