(எம்.மனோசித்ரா)
விவசாயப் பொருட்களை தடையின்றி வழங்குவதையும்விநியோகிப்பதையும் உறுதி செய்யும் புதிய சட்டமான அத்தியாவசிய விவசாய விநியோகச் சட்டத்தை நாடாளுமன்றத்தில் முன்வைக்கப் போவதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
நாடு எதிர்கொள்ளப் போகும் உணவுப் பற்றாக்குறை குறித்து விவசாய அமைச்சின் உயரதிகாரிகள் மற்றும் பிரதிநிதிகளுடன் இன்று (27) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.
விவசாயத்துக்கு தேவையான போதிய உரம் வழங்கப்படுவதை உறுதி செய்ய 600 மில்லியன் டொலர்கள் தேவைப்படும் என்று பிரதமர் இதன்போது தெரிவித்தார்.