Our Feeds


Friday, May 27, 2022

SHAHNI RAMEES

மக்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தும் இன்றைய லிட்ரோ நிறுவனத்தின் அறிவித்தல்!

 

எரிவாயு விநியோகம் இன்னும் இரண்டு நாட்கள் தாமதமாகும் என லிட்ரோ சமையல் எரிவாயு தெரிவித்துள்ளது.
 

இதன்படி, இன்றும்  27 ஆம் திகதியும்  நாளை  28 ஆம் திகதியும் எரிவாயுவை எதிர்பார்த்து வரிசையில் காத்திருக்க வேண்டாம் என அந்நிறுவனம் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

நேற்று(26) இலங்கைக்கு வரவிருந்த 3,500 மெட்ரிக் தொன் எரிவாயு ஏற்றிய இரண்டு கப்பல்களின் வருகை இரண்டு நாட்கள் தாமதமாகியுள்ளதாகவும் லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

அந்த எரிவாயு கப்பல் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை இலங்கையை வந்தடையும் என லிட்ரோ நிறுவனத் தலைவர் விஜத ஹேரத் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, எதிர்வரும் திங்கட்கிழமை முதல், எரிவாயு விநியோகத்தை முன்னெடுக்கக்கூடியதாக இருக்கும்.



Subscribe to this Blog via Email :
Previous
Next Post »