தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்து இன்னும் ஒரு மாதத்திற்குள் தமது தொழில்கள் வீழ்ச்சியடையும் அபாயம் உள்ளதாக இலங்கை ஐக்கிய தேசிய தொழில்முனைவோர் சங்கம் எச்சரித்துள்ளது.
இலங்கை ஐக்கிய தேசிய தொழில்முனைவோர் சங்க செயலாளர் செயலாளர் தயான் மெரன்சிகே இதனைத் தெரிவித்துள்ளார்.
"இப்போது தொழில்முனைவோராகிய நாங்கள் கடைசி கடினமான சூழ்நிலையில் இருக்கிறோம்," என்று அவர் கூறினார். சேமித்து வைத்த பணத்தில் எங்கள் வியாபாரம் நீண்ட நாட்களாக இழுத்தடிக்கப்பட்டு வருகிறது. நாங்கள் இனி மேலும் நகர முடியாத நிலையை அடைந்துள்ளோம்.
அரச உத்தியோகத்தர்களுக்கு சம்பளம் வழங்குவதற்கு பணம் அச்சடிக்கப்பட உள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.. ஆனால் தனியார் துறை ஊழியர்களுக்கு என்ன நடக்கும் ? என என சங்கத்தின் தலைவர் தானியா அபயசுந்தர கேள்வி எழுப்பி உள்ளார்.
அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க பணத்தை அச்சடிப்பீர்கள் என்றால் தனியார் துறையினருக்கு சம்பளம் வழங்க, பணம் அச்சிட எங்களுக்கும் அரசாங்கம் அச்சு இயந்திரம் ஒன்றை வழங்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.