(எம்.மனோசித்ரா)
இந்திய அரசாங்கத்தால் இலங்கைக்கு 260 மில்லியன் ரூபா பெறுமதியான மருந்துகள் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளன.
இலங்கைக்கான பதில் இந்திய உயர் ஸ்தானிகர் வினோத் கே ஜேக்கப்பினால், சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவிடம் குறித்த மருந்து தொகை கையளிக்கப்பட்டுள்ளது.
இந்த மனிதாபிமான உதவிப் பொருட்களை துரிதமாக விநியோகிப்பதற்காக இந்திய கடற்படைக்குச் சொந்தமானதும் நேரடியாக தரையிறங்கல் வசதியுடையதுமான 5,600 தொன் நிறை கொண்ட கரியால் கப்பலானது சாகர் ஐஓ பணியின் ஓர் அங்கமாக சேவையில் அமர்த்தப்பட்டிருந்தது.
மருத்துவப் பொருட்களுக்கு மேலதிகமாக இலங்கை மீனவர்களின் பயன்பாட்டுக்காக மண்ணெண்ணெய்யும் இக்கப்பல் மூலமாக தருவிக்கப்பட்டுள்ளது.
அடுத்துவரும் நாட்களில் இலங்கை மீன்பிடித் துறைமுக கூட்டுத்தாபனம் ஊடாக இந்த மண்ணெண்ணெய் பயனாளிகளுக்கு விநியோகிக்கப்படவுள்ளது.