Our Feeds


Thursday, May 26, 2022

ShortTalk

தேசபந்து தென்னகோனை ஏன் இடமாற்றம் செய்யவில்லை? பொலிஸ் மா அதிபரிடம் விளக்கம் கோருகிறது நீதிமன்றம்!



(எம்.எப்.எம்.பஸீர்)


‘மைனா கோ கம’, ‘கோட்டா கோ கம’ போராட்டக்காரர்கள்மீது தாக்குதல் நடத்திய விவகாரத்தில், மேல் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்  மா அதிபர் தேசபந்து தென்னகோனை இடமாற்றம் செய்யாமை தொடர்பில் நீதிமன்றுக்கு விளக்கமளிக்குமாறு பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்னவுக்கு கோட்டை நீதிமன்றம் நேற்று ( 25) உத்தர்விட்டது.

தேசபந்து தென்னகோனை அவர் தற்போது வகிக்கும் பதவியிலிருந்து இடமாற்றுமாறும், அப்பதவியில் அவர் இருப்பது விசாரணைகளை பாதிக்கும் எனவும் குறிப்பிட்டு  சட்ட மா அதிபர் ஆலோசனை வழங்கியுள்ள நிலையில் கூட அதனை செயற்படுத்தாமை தொடர்பிலேயே இவ்வாறு விளக்கமளிக்குமாறு கோட்டை நீதிவான் திலின கமகே உத்தரவிட்டார்.

மைனா கோ கம, கோட்டா கோ கம மீதான தாக்குதல்கள் குறித்த வழக்கு விசாரணை இன்று ( 25) கோட்டை நீதிவான்  திலின கமகே முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோதே நீதிவான் இந்த உத்தழவைப் பிறப்பித்தார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »