கொழும்பு கேம்பிரிட்ஜ் பிளேஸுக்கு அருகில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் போராட்டம் நடத்துவதற்கு தடை உத்தரவு பிறப்பிக்குமாறு கறுவாத்தோட்ட பொலிஸாரால் விடுக்கப்பட்ட கோரிக்கையை கொழும்பு மேலதிக நீதிவான் ஹர்ஷ கெகுலவல இன்று (26) நிராகரித்தார்.
அமைதியான முறையில் போராட்டம் நடத்துவதை தடுக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்காது என்றும், ஆனால் க.பொ.த சாதாரண தர மாணவர்களின் கல்வி மற்றும் பொதுமக்களுக்கு இடையூறுகளைத் தடுக்கும் அதிகாரம் பொலிஸாருக்கு இருப்பதாகவும் நீதிவான் தெரிவித்தார்.