Our Feeds


Sunday, May 29, 2022

SHAHNI RAMEES

வெளிநாட்டு நிறுவனங்கள் வெளியேறியதற்காக கடவுளுக்கு நன்றி- ரஷ்ய ஜனாதிபதி.

 

ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே 3 மாதங்களுக்கும் மேலாக போர் தொடரும் நிலையில் ரஷ்யாவிலுள்ள வெளிநாட்டு நிறுவனங்கள் அந்நாட்டை விட்டு வெளியேறி உள்ளன.

இந்நிலையில், வெளிநாட்டு நிறுவனங்கள் நாட்டை விட்டு வெளியேறியதற்காக கடவுளுக்கு நன்றி தெரிவிப்பதாக ரஷ்ய ஜனாதிபதி புட்டின் தெரிவித்துள்ளார்.

உக்ரைன் மீதான படையெடுப்பை கண்டித்து ரஷ்யாவிலுள்ள மெக்டொனால்ட்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் அந்நாட்டை விட்டு வெளியேறுவதாக கூறியுள்ளன.

இது குறித்து பேசிய ரஷ்ய ஜனாதிபதி புட்டின், ‘ வெளிநாட்டு நிறுவனங்கள் ரஷ்யாவை விட்டு வெளியேறுவதால் மகிழ்ச்சி அடைகிறேன். அந்நிறுவனங்களின் வெளியேற்றத்தால் உள்நாட்டு வணிக நிறுவனங்கள் வளர்ச்சி அடையும். இதற்காக கடவுளுக்கு நன்றி கூறுகிறேன்’ இவ்வாறு ரஷ்ய ஜனாதிபதி தெரிவித்தார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »