Our Feeds


Saturday, May 14, 2022

ShortTalk

துப்பாக்கிச் சூடு உத்தரவு ரத்துச் செய்யப்படும்: வெளிநாட்டு ஊடகவியலாளர்களிடம் பிரதமர் ரணில் உறுதி

 


அண்மையில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களின்
பின்னர் பாதுகாப்புப் படையினருக்கு வழங்கப்பட்டிருந்த துப்பாக்கிச் சூடு நடத்துவதற்கான உத்தரவை ரத்து செய்வதாக, புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உறுதியளித்துள்ளார்.

இந்த நடைமுறை குறித்து வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் விக்கிரமசிங்கவிடம் வினவியபோதே அவர் இந்த உறுதிமொழியை வழங்கினார்.

கலவரம் மீண்டும் தொடங்கினால் மட்டுமே பாதுகாப்புப் படையினருக்கு இதுபோன்ற உத்தரவுகள் வழங்கப்படும் என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

புதிய அரசாங்கம் அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தத்தை ரத்துச் செய்து ஜனாதிபதியின் அதிகாரங்களைக் குறைக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியின் உதவித் தலைவர் அகிலவிராஜ் காரியவசம் ஊடகவியலாளர் சந்திப்பொன்றில், தமது கட்சியைச் சேர்ந்த எவரும் அரசாங்கத்தில் எந்தப் பதவியையும் பெற மாட்டார்கள் என்று தெரிவித்தார். பதவிகளைப் பெறாமல் அரசாஙகத்தை ஆதரிப்போம்” என்றும் அவர் குறிப்பிட்டார்.

“புதிய அமைச்சரவையில் பல அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் இருப்பார்கள்” என்றும் அவர் மேலும் கூறினார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »