Our Feeds


Sunday, May 1, 2022

ShortTalk

காணாமல் போனோர் அலுவலக பதவியிலிருந்து விலகினார் சட்டத்தரணி சிராஸ் - ஜனாதிபதி கோட்டாவுக்கு கடிதம் மூலம் அறிவிப்பு



(எம்.எப்.எம்.பஸீர்)


காணாமல் போனோர் தொடர்பிலான அலுவலகத்துக்கு ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட உறுப்பினரான சிரேஷ்ட சட்டத்தரணி சிராஸ் நூர்தீன் அப்பதவியிலிருந்து இராஜினாமாச் செய்துள்ளார். இது குறித்த கடிதத்தை அவர் நான்கு பிரதான காரணிகளை முன்வைத்து, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷவுக்கு அனுப்பியுள்ளார்.


காணாமல் ஆக்கப்பட்டுள்ளவர்களின் குடும்பங்களுக்கு, காணாமல் போனோர் அலுவலகம் ஊடாக எந்த நன்மை பயக்கும் விடயங்களையும் முன்னெடுக்க முடியாமல் போயுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ள சட்டத்தரணி சிராஸ் நூர்தீன், அவ்வலுவலகத்தில் சுதந்திரமாக செயற்பட முடியவில்லை என குறிப்பிட்டே இந்த இராஜினாமா கடிதத்தை அனுப்பியுள்ளார்.

கடந்த 2021 டிசம்பர் 13 ஆம் திகதி சிரேஷ்ட சட்டத்தரணி சிராஸ் நூர்தீன் காணாமல் போனோர் தொடர்பிலான அலுவலகத்தின் (ஓ.எம்.பி) உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.

இந்நிலையிலேயே சுமார் நான்கு மாத காலத்துக்குள்ளேயே அவர் அப்பதவியிலிருந்து இராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »