பண்டாரகம, அட்டுலுகம பிரதேசத்தில் நேற்று காணாமற் போன சிறுமி வேறு இடத்தில் கொலை செய்யப்பட்டு குறித்த இடத்துக்கு கொண்டுவரப்பட்டிருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
நேற்று (27) காலை காணாமல் போன சிறுமியின் சடலம் அட்டுலுகம பிரதேசத்தில் சிறுமியின் வீட்டுக்கு அருகிலுள்ள சதுர்ப்பு நிலத்துக்கு அருகில் இருந்து இன்று மாலை கண்டெடுக்கப்பட்டது.
அட்டுலுகம அலுகஸ்ஸாலி வித்தியாலயத்தில் 4ஆம் தரத்தில் கல்வி கற்கும் 9 வயதுடைய பாத்திமா ஆயிஷா என்ற சிறுமியே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
நேற்று காலை 10.15 மணியளவில் தனது வீட்டில் இருந்து 200 மீற்றர் தூரத்தில் உள்ள கடையொன்றில் கோழி இறைச்சி வாங்கச் சென்ற போதே சிறுமி காணாமல் போயிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது