Our Feeds


Friday, May 13, 2022

ShortTalk

SHORT_BREAKING: மஹிந்த ராஜபக்ஷ, ஜொனி, பொலிஸ் மா அதிபர் உட்பட 7 பேரை கைது செய்ய உத்தரவிடக்கோரி நீதி மன்றில் மனுத் தாக்கல்.



(எம்.எப்.எம்.பஸீர்)


கோட்டாகோகம, மைனா கோகம அமைதிப் போராட்டத்தில்  அத்துமீறி தாக்குதல் நடத்தப் பட்டமை தொடர்பில்  முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ, முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ, பொலிஸ் மா அதிபர் உள்ளிட்ட 7 பேரைக் உடனடியாக  கைது செய்ய சி.ஐ.டி.யினருக்கு உத்தரவிடுமாறு கோரி சட்டத்தரணி ஒருவர் கோட்டை நீதிவான் நீதிமன்றில்  இன்று (13) மனுத்தாக்கல் செய்துள்ளார்.

சட்டத்தரணி சேனக பெரேராவே  இதனை இவ்வாறு தாக்கல் செய்துள்ளார்.

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ,   முன்னாள் அமைச்சர்களான ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ, சனத் நிசாந்த  நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்ஜீவ எதிரிமான்ன, மொரட்டுவை நகர சபை தலைவர் சமன் லால் பெர்ணான்டோ, மேல் மாகாண  சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன், பொலிஸ் மா அதிபர் சிடி. விக்ரமரத்ன ஆகியோரை கைது செய்ய உத்தரவிடுமாறு கோரியே  இம்முறைப்பாடு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த முறைப்பாடு குறித்த வழக்கு  கோட்டை நீதிவான்  திலின கமகே முன்னிலையில்  விசாரணைக்கு எடுக்கப்பட்டது. அதன்போது மனுவை எதிர்வரும் 17 ஆம் திகதி கொழும்பு பிரதான நீதிவான் முன்னிலையில் விசாரணைக்கு எடுக்க கோட்டை நீதிவான் உத்தரவிட்டார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »