(எம்.மனோசித்ரா)
எனவே பணத்தை அச்சிடுவதற்கு பதிலாக தனியார் நிறுவனங்கள் அரச வங்கிகளுக்கு செலுத்த வேண்டிய கடனை மீளப்பெறுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் பிரதமரிடம் வலியுறுத்தியுள்ளார்.
இன்று (27) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,
நாட்டை நிர்வகிப்பதற்கும், அரச உத்தியோகத்தர்களுக்கு சம்பளம் வழங்குவதற்காகவும் மேலும் 1 டிரில்லியன் பணம் அச்சிடப்படவுள்ளதாக தெரிய வந்துள்ளது. ஒரு டிரில்லியன் என்பது ஒரு இலட்சம் கோடி ரூபாவாகும். இவ்வாறு பணத்தை அச்சிட வேண்டாம் என்று பிரதமரிடம் கோருகிறோம்.
இந்த தொகை பணம் அச்சிடப்பட்டால் பாண் இறாத்தல் ஒன்றின் விலை 400 ரூபா வரையும் பால்மா பக்கெற்றின் விலை 1,000 ரூபா வரையும், பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 600 ரூபா வரையும், சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்றின் விலை 10,000 ரூபா வரையும் உயர்வடையக் கூடும் என்றும் தெரிவிவத்தார்.