Our Feeds


Saturday, July 30, 2022

SHAHNI RAMEES

18 வயதான இளைஞரின் சடலமே காலிமுகத்திடல் கடற்கரையில் மீட்கப்பட்டது!

 

காலி முகத்திடல் கடற்பரப்பில்  உயிரிழந்த நிலையில் இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த சடலம் நேற்று (29) மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

 

கோட்டை பொலிஸாருக்கு கிடைக்கபெற்ற  தகவலுக்கு அமைவாக குறித்த சடலம் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர் 18 வயதுடைய கொட்டாவ வடக்கு, பன்னிப்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்தவராவார்.

சம்பவம் தொடர்பில்  பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »