Our Feeds


Saturday, July 30, 2022

SHAHNI RAMEES

சர்வகட்சி அரசாங்கத்தில் இணைந்துகொள்வதில் சிக்கல் – சரத் பொன்சேகா

 

சர்வகட்சி அரசாங்கம் என்ற பேச்சுக்கள் தற்போது நகைச்சுவையாக மாறியுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் அதிகாரங்களை குறைத்து பிரதமருக்கு அதிகாரங்களை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்த நிலையில் ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக பதவியேற்றுள்ளார்.

இந்நிலையில் ஜனாதிபதியின் அதிகாரங்களை குறித்து 19 ஆவது திருத்தத்தை மீண்டும் இந்த அரசாங்கம் கொண்டுவருமா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக சரத் பொன்சேகா கூறினார்.

ஆகவே சர்வகட்சி அரசாங்கத்தில் இணைந்துகொள்வதில் சிக்கல் காணப்படுவதாகவும் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா சுட்டிக்காட்டினார்.

தற்போதைய சூழ்நிலையில் தேர்தலை நடத்த முடியாது என்றும் அதற்கு பதிலாக புதிய சக்தி ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என்றும் சரத் பொன்சேகா குறிப்பிட்டார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »