Our Feeds


Sunday, July 31, 2022

SHAHNI RAMEES

நாளை முதல் QR முறைமையின் கீழ் மாத்திரமே எரிபொருள்...!

 

தேசிய எரிபொருள் அனுமதி பத்திர முறைமை நாளை முதல் நாடு முழுவதும் அமுலாகும் வகையில் செயற்படுத்தப்படவுள்ளது.

எனினும், நாடு முழுவதும் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் தங்களுக்கான ஒதுக்கத்தை பெற்றுக் கொள்வதற்காக ஒரு வார காலம் உள்ளமையினால் நெரிசல் ஏற்படாத வகையில் செயற்படுமாறு எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர பொது மக்களிடம் கோரியுள்ளார்.

இதேவேளை, தேசிய எரிபொருள் அனுமதி பத்திர முறைமை என்ற QR முறைமைக்கு இன்று முதல் வாகன வருமான அனுமதி பத்திரத்தை கொண்டு பதிவு செய்ய முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எரிபொருளுக்கான QR முறைமைக்கு ச்செசி இலக்கத்தை கொண்டு பதிவு செய்ய முடியாத வாகனங்களை இவ்வாறு பதிவு செய்ய முடியும். QR முறைமை தொடர்பில் தற்போது ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கி குறித்த முறைமை முழுமையாக செயற்படுத்துவதாக எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »