சர்வகட்சி அரசாங்கத்திற்கு ஆதரவளிக்கும் வகையில், தமது கட்சித் தலைவர் மைத்ரிபால சிறிசேனவே நாடாளுமன்றத்தின் சபாநாயகர் பதவிக்கு அமர்த்த வேண்டும் என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி அரசாங்கத்திடம் கோரிக்கையை முன்வைத்துள்ளதாக தெரியவருகிறது.
இதற்கு மேலதிகமாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மேலும் பல அமைச்சரவை பதவிகளை ஏற்க விருப்பம் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஆனால் அரசாங்கம் இந்த பதவிகளை வழங்குவது குறித்து இதுவரை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு பதில் எதுவும் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.
எவ்வாறாயினும், தற்போதைய சபாநாயகரை நீக்குவதற்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை வைத்திருக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தயாராக இல்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த பதவிகளுக்கு மேலதிகமாக கடந்த வாரம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவர் மைத்ரிபால சிறிசேன ஆகியோருக்கிடையில் சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பதற்கான பொதுவான வேலைத்திட்டம் தொடர்பில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றதுடன் அதன் நீடிப்பு இந்த வாரம் இடம்பெறவுள்ளது.