Our Feeds


Monday, August 8, 2022

SHAHNI RAMEES

ஜனாதிபதியிடம் கிரியெல்ல எம்.பி. முன்வைத்துள்ள முக்கிய கோரிக்கை..!

 

அனைத்து விடயங்களுக்கும் முன்னதாக சர்வகட்சி அரசாங்கம் ஸ்தாபிக்கப்படும் கால வரையறையை ஜனாதிபதி வெளிப்படுத்த வேண்டுமென எதிர்க்கட்சியின் பிரதம கொறடா லக்ஷ்மன் கிரியெல்ல எம்.பி கோரிக்கை விடுத்துள்ளார்.

ஜனாதிபதி பல விடயங்கள் குறித்து பேசினாலும் அது தொடர்பில் இதுவரையில் கருத்து வெளியிடவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எந்தவொரு கட்சியாலும் குறுகிய காலத்திற்கு சர்வகட்சி அரசாங்கத்திற்கு ஆதரவை வழங்க முடியும் என சுட்டிக்காட்டிய கிரியெல்ல எம்.பி, கட்சியின் அடையாளத்தை பாதுகாத்துக்கொண்டு நீண்டகாலத்திற்கு ஆதரவு வழங்க முடியாது எனவும் குறிப்பிட்டார்.

கோட்டாபய ராஜபக்ஷவின் இறுதிப் பதவிக் காலத்தில் 6 மாத குறுகிய காலத்திற்கு சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பதற்கு இணக்கம் காணப்பட்டதாகவும், பொது வேலைத்திட்டத்தை முன்வைத்து நாட்டை மீட்டெடுத்ததன் பின்னர் தேர்தலுக்கு செல்ல தீர்மானிக்கப்பட்டதாகவும் லக்ஷ்மன் கிரியெல்ல எம்.பி. தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்களுடன் அடுத்த மூன்று வருடங்களுக்கு வாக்கெடுப்பு நடத்தப்பட மாட்டாது என தற்போதைய ஜனாதிபதி அறிவித்துள்ள நிலையில், அதன் அடிப்படையில் சர்வகட்சி அரசாங்கத்தின் காலம் குறித்து பாரிய சந்தேகம் நிலவுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »