Our Feeds


Wednesday, September 14, 2022

SHAHNI RAMEES

வட்டுக்கோட்டையில் 11 வாள்களுடன் கைதான 22 வயது இளைஞன்!


 யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை துணைவி பகுதியில் 11 வாள்களுடன் 22 வயதான இளைஞர் ஒருவரை பொலிஸ் விசேட அதிரடி படையினர் கைது செய்து வட்டுக்கோட்டை பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.


வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட துணைவி பகுதியில் நேற்று (13) செவ்வாய்க்கிழமை இரவு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.


துணைவி பகுதியில் உள்ள ஆலயம் ஒன்றில் பல வடிவங்களில் செய்யப்பட்ட வாள்கள் காணப்படுவதாக பொலிஸ் விசேட அதிரடி படையினருக்கு இரகசிய தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது.


அதனைடுத்து அங்கு விரைந்த அதிரடி படையினர் ஆலயத்தினை சுற்றி வளைத்து தேடுதல் நடாத்தினார்கள்.


அதன் போது அங்கிருந்து பல வடிவங்களில் செய்யப்பட்ட 11 வாள்களை கைப்பற்றியதுடன் 22 வயதான இளைஞனையும் கைது செய்தனர்.


கைப்பற்றப்பட்ட வாள்களையும் , கைது செய்யப்பட்ட இளைஞரையும் வட்டுக்கோட்டை பொலிஸாரிடம் ஒப்படைத்த நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


இதேவேளை, குறித்த இளைஞரின் தந்தை குறித்த ஆலயத்தின் பூசகர் எனவும், வாள்களுடன் கலையடி, குறி சொல்பவர் எனவும், அதற்காக பயன்படுத்தும் வாள்களே அவை என இளைஞனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »