அரசுக்கு, சுமார் 64 இலட்சம் ரூபா வருமான வரி தொகையினை செலுத்தாது மோசடி செய்துள்ளதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் பிரபல திரைப்பட தயாரிப்பாளர் புத்தி கீர்த்தி சேனவை எதிர்வரும் 27 ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.
கொழும்பு மேலதிக நீதிவான் பண்டார இலங்கசிங்க இதற்கான உத்தரவை நேற்று பிறப்பித்தார்.
தேசிய வருமான வரித் திணைக்களம், கொழும்பு நீதிவான் நீதிமன்றில் முன் வைத்த முறைப்பாட்டுக்கமைய குறித்த திரைப்பட தயாரிப்பாளருக்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
புத்தி கீர்த்திசேன என்பவர், 64 இலட்சத்து 93 ஆயிரத்து 277 ரூபா 34 சதம் ( 6,493,277.34) வரித் தொகையை செலுத்தாது அரசுக்கு மோசடி செய்துள்ளதாக தேசிய வருமான வரித் திணைக்களம் கொழும்பு நீதிவான் நீதிமன்றில் முறைப்பாடு முன்வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.