மினுவங்கொடை முக்கொலைச் சம்பவத்துடன் தொடர்புடையதாக தெரிவித்து நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நான்காவது சந்தேக நபர் நேற்றைய தினம் கிரிவுல்ல பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
மினுவாங்கொடை - கமன்கெதர பகுதிக்கு சிற்றூர்ந்து மற்றும் உந்துருளியில் வருகை தந்தவர்கள் தந்தை மற்றும் அவரின் புதல்வர்கள் இருவர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதுடன் தப்பிச் சென்றுள்ளனர்.
51 வயதான தந்தை 23 மற்றும் 24 வயதுடைய புதல்வர்கள் இருவர் சம்பவத்தில் உயிரிழந்தனர்.
துப்பாக்கி பிரயோகத்துடன் தொடர்புடையவர்கள் தலைமறைவாகியிருந்த நிலையில், சம்பவத்துடன் தொடர்புடையதாக தெரிவித்து கலேவெல பகுதியில் மூவர் கைது செய்யப்பட்டனர்.
கொலை செய்வதற்காக பயன்படுத்தப்பட்ட சிற்றூர்ந்து கம்பஹா படல்கம பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கொலை சம்பவம் இரு குடும்பங்களுக்கிடையிலான தனிப்பட்ட பிரச்சினை என காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
பட்டம் பறக்கவிடும் கடந்த 2017 ஆம் ஆண்டு உருவான பிரச்சினை இதுவரை நீடிப்பதாகவும் காவல் துறையினர் தெரிவிக்கின்றனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் ஏற்கனவே நால்வர் கொலை செய்யப்பட்டுள்ள நிலையில், நேற்றைய தினம் இடம்பெற்ற முக்கொலையுடன் இதுவரை 7 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.