Our Feeds


Thursday, December 22, 2022

News Editor

12 மணி நேர நீர் வெட்டு


 

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளில் இன்று (22) மாலை 06 மணி முதல் நாளை (23) காலை 06 மணி வரை 12 மணித்தியாலங்களுக்கு நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

அதற்கமைய உஸ்வெட்டகெய்யாவ, பமுணுகம மற்றும் தல்தியவத்தை ஆகிய பகுதிகளில் நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

உஸ்வெட்டகெய்யாவ பாலத்தினூடாக முன்னெடுக்கப்படும் அவசர திருத்தப் பணிகள் காரணமாகவே இந்த நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை குறிப்பிட்டுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »