Our Feeds


Sunday, December 18, 2022

ShortTalk

மியன்மார் அகதிகள் 140 பேருடன் யாழ் கடலில் தத்தளித்த படகு கரைக்கு கொண்டுவரப்பட்டது.



யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கடலில், 140 பேருடன் தத்தளித்துக் கொண்டிருந்த படகு மீட்கப்பட்டு, காங்கேசன்துறை துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.


மியன்மாரில் இருந்து இந்தோனேசியா செல்வதற்காக சிறுவர்கள் உட்பட 140 பேருடன் சென்ற அகதிகள் படகு வடமராட்சி கிழக்கு உடுத்துறை கடற்பகுதியில் சேதமடைந்த நிலையில் கடலில் தத்தளித்துள்ளது.

இதனை அடுத்து அங்கு விசாரணை நடாத்தப்பட்டு, கடற்படையின் இரண்டு டோறா படகுகள் அகதிகள் படகிற்கு பாதுகாப்பு வழங்கிய நிலையில், குறித்த படகு 140 பேருடன் காங்கேசன்துறை துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »