ஹோமாகம - பிட்டிபனவில் அமைந்துள்ள பௌத்த பாலி பல்கலைகழகத்தின் மாணவர் விடுதி வளாகத்தில் கைவிடப்பட்ட நிலையில் உள்ள கிணற்றொன்றிலிருந்து 2,000 வெற்று பியர் ரின்கள் மற்றும் 500இற்கும் அதிகமான வெற்று மது போத்தல்கள் பாதுகாப்பு பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இந்த பல்கலைகழகம் மாணவர்களின் பகிடிவதை, பாலியல் தொல்லை உள்ளிட்ட பல்வேறு ஒழுக்காற்று நடவடிக்கைகளால் அண்மையில் அரசாங்கத்தினால் மூடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
செய்தியாளர் – ஹேமந்த
நன்றி: தமிழன்