(எம்.எம்.சில்வெஸ்டர்)
பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட தேடுதல்களின்போது, நாட்டின் 6 வெவ்வேறு பகுதிகளில் ஹெரோயின் போதைப்பொருளை வைத்திருந்த ஆறு சந்தேகக நபர்கள் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள், பொரளை, இரத்மலானை, தெஹிவளை, மாளிகாவத்தை, வெல்லம்பிட்டி, தங்கல்லை ஆகிய பிரதேசங்களை சேர்ந்தவர்கள் ஆவர்.
மேற்குறித்த பிரதேசங்களைச் சேர்ந்த சந்தேக நபர்களிடமிருந்து முறையே 7 கிராம் 480 மில்லி கிராம், 6 கிராம், 6 கிராம் 100 மில்லி கிராம், 5 கிராம் 100 மில்லி கிராம், 5 கிராம் 720 மில்லி கிராம், 104 கிராம் 789 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இதில் தெஹிவளையில் கைது செய்யப்பட்டவர் 54 வயதுடைய பெண் என்பதுடன், ஏனையோர் ஐவரும் ஆண்கள் ஆவர். இவர்கள் ஐவரும் 29 வயதிற்கும் 40 வயதிற்கும் இடைப்பட்டவர்கள் ஆவர்.