Our Feeds


Friday, December 23, 2022

News Editor

பொருளாதார நெருக்கடி: ஆதரவற்றவர்களாக மாறியுள்ள புற்றுநோயாளர்கள்


 

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியில் புற்றுநோயாளர்கள் ஆதரவற்றவர்களாக மாறியுள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்திச் சேவை தெரிவித்துள்ளது.

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியினால் ஏற்பட்டுள்ள மருந்துப் பற்றாக்குறை மற்றும் ஏனைய சிரமங்களினால் நூற்றுக்கணக்கான புற்று நோயாளர்களுக்கு முறையான சிகிச்சைகள் கிடைக்காமல் அவர்களின் நிலை மேலும் மோசமடையும் ஆபத்து காணப்படுவதாக ரொய்ட்டர்ஸ் சுட்டிக்காட்டியுள்ளது.

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக, நாடு முழுவதிலும் உள்ள வைத்தியசாலைகள் மருந்துப் பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், இது கடந்த 8ஆம் மாதங்களில் மோசமாகியுள்ளதாகவும் மருத்துவத் துறையின் பிரதிநிதி ஒருவர் தெரிவித்துள்ளதாக ரொய்ட்டர்ஸ் சுட்டிக்காட்டியுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »