Our Feeds


Wednesday, December 21, 2022

ShortTalk

உள்ளூராட்சித் தேர்தல் குறித்து கலந்துரையாட அழைப்பு



தேர்தல் குறித்து கலந்துரையாட அனைத்து மாவட்டங்களின் பிரதி மற்றும் உதவி தேர்தல் ஆணையாளர்களும் மாவட்ட செயலாளர்களும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி நாளை மறுதினம் (23) கொழும்பில் உள்ள தேர்தல்கள் ஆணைக்குழுவின் அலுவலகத்தில் காலை 10.00 மணிக்கு குறித்த கூட்டம் இடம்பெறவுள்ளது.

இதற்கான அழைப்பை தேர்தல்கள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க விடுத்துள்ளார்.

இதன்போது தேர்தலை நடத்துவது தொடர்பான சகல விடயங்கள் தொடர்பிலும் விரிவாக கலந்துரையாடப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »