Our Feeds


Thursday, December 22, 2022

ShortTalk

கொழும்பு துறைமுக நகருக்கு தனியான நீதி மன்றம் - துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு கலந்துரையாடல்




கொழும்பு துறைமுக நகர அதிகார வரம்புக்குள் புதிதாக வர்த்தக மேல் நீதிமன்றத்தை அமைப்பது தொடர்பாக சட்டத்துறை உயர் அதிகாரிகளுடன் கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு கலந்துரையாடல்களை ஆரம்பித்துள்ளதாக பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.


அதனடிப்படையில், எதிர்காலத்தில் துறைமுக நகரப் பகுதியில் நீதிமன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் எனவும் அவர் கூறியுள்ளார்.

இந்த கலந்துரையாடல்கள் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் தெரிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »