Our Feeds


Tuesday, December 20, 2022

ShortTalk

அதிர்ச்சித் தகவல் - ‘ஐஸ்’ போக்குவரத்தின் முக்கிய மையம் இலங்கை - இன்டர்போல் தகவல்!



ஐஸ் அல்லது கிரிஸ்டலைன் எனப்படும் செயற்கை போதைப்பொருளின் போக்குவரத்துக்கான பிரதான மையமாக இலங்கை மாறியுள்ளதாக இன்டர்போல் அல்லது சர்வதேச பொலிஸாரால் தெரியவந்துள்ளது.


இன்டர்போல் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட ‘லயன் ஷிப்’ நடவடிக்கையின் கீழ் இந்த தகவல் தெரியவந்துள்ளதுடன், 22 நாடுகளுக்கு இந்த ஐஸ் போதைப்பொருள் கடத்தப்படுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஐஸ் போதைப்பொருள் 500 பேர் போன பார்ச்சூன் நிறுவனங்களுக்கு சமமான கிரிமினல் கும்பல்களால் கடத்தப்படுவதாக இன்டர்போல் பொதுச்செயலாளர் ஜூர்கன் ஸ்டாக் தெரிவித்துள்ளார்.

ஆசியாவில் ஐஸ் போதைப்பொருட்கள் அதிக அளவில் கொண்டு செல்லப்படுவதாகவும், பல புதிய போதைப்பொருள் போக்குவரத்து வழிகள் உருவாகியிருப்பதாகவும் இன்டர்போல் தெரிவிக்கின்றது.

இந்த ஐஸ் உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் இரசாயனங்கள் மிகவும் தீங்கு விளைவிப்பவை என தெரியவந்துள்ளதுடன், ஐஸ் போதைப்பொருளில் ஈடுபட்ட 24 இலங்கை கடத்தல்காரர்கள் வெளிநாடுகளில் பதுங்கி இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »