இந்த வருடத்தின் முதல் 11 மாதங்களில் 497 கொலைகள்
இடம்பெற்றுள்ளமையை பொலிஸ் அறிக்கைகள் உறுதிப்படுத்துவதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதார மற்றும் புள்ளிவிபரவியல் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரல தெரிவித்துள்ளார்.இந்தக் கொலைகளில் 46 சத வீதமானவை (223 கொலைகள்) துப்பாக்கிச் சூடு, மற்றும் தாக்குதலால் ஏற்பட்டவை என்றும் அவர் கூறினார்.