Our Feeds


Friday, December 16, 2022

ShortTalk

BREAKING: கிரிக்கெட் வர்ணனையாளர் பிரையன் தோமஸுக்கு வெளிநாட்டு பயணத்தடை!




கொழும்பைச் சேர்ந்த வர்த்தகர் தினேஷ் ஷாப்டரின் கொலை தொடர்பில் முன்னாள் கிரிக்கெட் வர்ணனையாளர் பிரையன் தோமஸுக்கு வெளிநாட்டு பயணத்தடையை கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கெகுனவெல இன்று வெள்ளிக்கிழமை (16) விதித்தார்.


முன்னாள் கிரிக்கெட் வர்ணனையாளர் பிரையன் தோமஸிடம் இரண்டு கடவுச்சீட்டுகள் இருப்பதாகவும், இந்த இரண்டு கடவுச்சீட்டுகளுக்கும் வெளிநாட்டுப் பயணத் தடையை நீதிமன்றம் விதித்துள்ளது.

மறைந்த தினேஷ் ஷாஃப்டர் பயன்படுத்திய கையடக்கக் தொலைபேசி தொடர்பான தொலைத்தொடர்பு பகுப்பாய்வு அறிக்கையை வழங்குமாறு தொலைத்தொடர்பு சேவை வழங்குனர்களுக்கு உத்தரவிடுமாறு பொரளை பொலிஸார் நீதிமன்றில் கோரிக்கை சமர்ப்பித்துள்ளனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »